கோவை - பொள்ளாச்சி வரையிலான பயணிகள் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு

கோவை: கோவை - பொள்ளாச்சி வரையில் இயக்கப்பட்டு வரும் பயணிகள் சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை - பொள்ளாச்சி வரையில் இயக்கப்பட்டு வரும் பயணிகள் சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண் : 06083/06084 கோவை - பொள்ளாச்சி - கோவை பயணிகள் சிறப்பு ரயில்களின் சேவை இன்று (மே 10) முதல் நவம்பர் 21-ம் தேதி வரை மேலும் சுமார் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த காலகட்டத்தில், கோவை - பொள்ளாச்சி செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06083) கோவையில் இருந்து அதிகாலை 05.40 மணிக்குப் புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு 07.05 மணிக்கு சென்றடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு.

கோவை - பொள்ளாச்சி செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06085) கோவையில் இருந்து மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு 8 மணிக்கு சென்றடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு.

பொள்ளாச்சி - கோவை செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06084) பொள்ளாச்சியில் இருந்து அதிகாலை 07.30 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு காலை 08.45 மணிக்கு வந்தடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு.

பொள்ளாச்சி - கோவை செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06086) பொள்ளாச்சியில் இருந்து இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு இரவு 09.45 மணிக்கு வந்தடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு, இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...