கோவை: கோவை - பொள்ளாச்சி வரையில் இயக்கப்பட்டு வரும் பயணிகள் சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை - பொள்ளாச்சி வரையில் இயக்கப்பட்டு வரும் பயணிகள் சிறப்பு ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண் : 06083/06084 கோவை - பொள்ளாச்சி - கோவை பயணிகள் சிறப்பு ரயில்களின் சேவை இன்று (மே 10) முதல் நவம்பர் 21-ம் தேதி வரை மேலும் சுமார் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த காலகட்டத்தில், கோவை - பொள்ளாச்சி செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06083) கோவையில் இருந்து அதிகாலை 05.40 மணிக்குப் புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு 07.05 மணிக்கு சென்றடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு.
கோவை - பொள்ளாச்சி செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06085) கோவையில் இருந்து மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு 8 மணிக்கு சென்றடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு.
பொள்ளாச்சி - கோவை செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06084) பொள்ளாச்சியில் இருந்து அதிகாலை 07.30 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு காலை 08.45 மணிக்கு வந்தடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு.
பொள்ளாச்சி - கோவை செல்லும் பயணிகள் ரயில் (எண் : 06086) பொள்ளாச்சியில் இருந்து இரவு 08.30 மணிக்கு புறப்பட்டு, கோவைக்கு இரவு 09.45 மணிக்கு வந்தடையும். ரயில் நிறுத்தப்படும் இடங்கள் : போத்தனூர், கிணத்துக்கடவு, இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.