பேராசிரியை நிர்மலா தேவியை மே 23 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவியை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவியை வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் உதவி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற சம்பவம் தமிழக வரலாற்றில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஏப்., 16-ந்தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.

இதனிடையே, நிர்மலா தேவி விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், அவர் சி.பி.சி.ஐ.டி., காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார். இந்த நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் இருந்து விருதுநகர் கொண்டு செல்லப்பட்டார். நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால், போலீசார் அவரை விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்டுத்தினர். அப்போது, அவரை மே 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...