இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு : கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., சோதனை

கோவை : கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.


கோவை : கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்புடைய 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 



கோவை மாநகர் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த சசிக்குமார், சுப்பிரமணியபாளையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கை துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

2016-ம் ஆண்டு அப்துல் ஹக்கீம் என்பவர் கிருஷ்ணராஜ் காலணி பகுதியில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குபழியாக சசிக்குமார் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்தக் கொலையில் அமைப்பு ரீதியான பின்னணி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு விசாரணைகள் மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 



கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். இதில் அபுதாகிர்,சுபேர் ஆகியோரின் இல்லங்களில் இருந்து மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில், சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். அதிகாலை 3 மணி முதல் இந்த சோதனையானது நடைபெற்றது. இதில், சுகுணாபுரம் ஹைதர் அலி, பிலால் எஸ்டேட் ஹநீஸ், வெள்ளக்கிணறு முகமது அலி, துடியலூர் சதாம், செல்வபுரம் ஃப்பெபின் ரகுமான் உள்ளிட்ட 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ., அமைப்பினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைகளில் செல்போன்கள், மெம்மரி கார்டுகள் போன்ற ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். அதேபோல, ஹநீஸ் என்பவரது பட்டறையிலும் சோதனை செய்து வருகின்றனர். இதில், அவர் பயன்படுத்தி வந்த செல்போன் மறைக்கபட்டிருந்ததால், அது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். இவரிடம் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதில், ஃப்பெபின் ரகுமான் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் என்.ஐ.ஏ., மேல் புகார் அளித்தார். இந்த நிலையில் இவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Video: Laxman

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...