விற்பனைக்கு தயாரான பொது இடம் மீட்பு : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கோவை : தனியார் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட இருந்த 23 சென்ட் அளவிலான பொது இடத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை : தனியார் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமித்து விற்பனை செய்யப்பட இருந்த 23 சென்ட் அளவிலான பொது இடத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 64-வது வார்டில், சுமார் 2.30 ஏக்கர் பரப்பளவில் ராம் ரெசிடென்சி என்ற குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. அங்கு 23 சென்ட் அளவிற்கு மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடம் அமைந்துள்ளது.



பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட வேண்டிய அந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது. சுற்றிலும் கம்பி வேலி அமைத்து அந்த இடத்தை விற்பனை செய்ய, குடியிருப்பு உரிமையாளர்கள் முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து சவுரிபாளையத்தை சேர்ந்த ரிசர்வ் சைட் மீட்பு செயற்பாட்டாளரான தியாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, பொது இடம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் ஹேமலதா மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள பொது இடத்தை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, ஆக்கிரமிக்கப்பட இருந்த பொது இடத்தை மீட்ட அதிகாரிகள், 'இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என்ற அறிவிப்பு பலகையை வைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...