தமிழகத்தை ஆளுவது அரசா...? ஆளுநரா...?

தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு அரசை விட ஆளுநரின் அறிவிப்புகளே முதலில் குரல் கொடுப்பதால், ஆட்சி செய்வது யார் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே கிளம்பியுள்ளது.


தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு அரசை விட ஆளுநரின் அறிவிப்புகளே முதலில் குரல் கொடுப்பதால், ஆட்சி செய்வது யார் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே கிளம்பியுள்ளது. 

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஆட்சி நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. 

இந்த நிலையில் அருப்புக் கோட்டை கல்லூரி பேராசிரியை ஒருவர் மாணவிகளை பாலியலுக்கு வலியுறுத்தியது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, அந்தப் பேராசிரியை கைது செய்து, இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இது தொடர்பாக, அரசு தரப்பில் இருந்து இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. தலைமை செயலாளர் அந்தஸ்திலிருந்து ஓய்வு பெற்ற சந்தானம் விரைவில் விசாரணையை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆளுநர் அலுவலகத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் தமிழக அரசு மீதான விமர்சனங்கள் மேலும் எழுத் தொடங்கியுள்ளன. வழக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுதான் நிர்வாகமாகச் செயல்படும். ஆனால், இப்போது பல அறிவிப்புகள் நேரடியாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியாகின்றன. பிறகு மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசு எதற்காக..? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் விசாரணைக்கு உத்தரவிடுவதாக ஆளுநர் கூறுகிறார். இந்த மாதிரியான நேரடியாக நிர்வாகம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டா..? என்ற கேள்வியும் பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...