4 நாட்கள் நடக்கும் மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடக்கம்

கோவை : கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியில், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது.

கோவை : கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியில், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. 



சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையும் இணைந்து ஜவுளி தொழில்நுட்பத் துறைக்கும், ஜவுளி தொழில் முனைவோர்க்கும் உதவ பல்வேறு தொழில்நுட்ப உட்பிரிவுகளில் ஜவுளி பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்கவிழா கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தொழில்நுட்ப ஜவுளித்துறையின் ஒரு உட்பிரிவான மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. 8-ம் தேதி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 80 பேர் பங்கேற்றனர். 



பட்டறையின் முதல் நாள் துறைசார் வல்லுநர்களின் விரிவுரைக்காக ஒதுக்கப்பட்டது. மேலும், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறையில் தயாரிப்பு முறை, தொழில்நுட்பம், இயந்திரங்கள், தரநிலைகள், சந்தைத் தேவைகள், சந்தைப்படுத்துதல் முதலிய தலைப்புகளில் பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும்.  மேலும், புதிய பொருட்கள் உற்பத்தி, SWOT ஆராய்ச்சி புதிய வியாபாரத்தில் நுழைவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...