வாக்குச்சாவடி நிலை மதிப்பு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து அரசு ஆசிரியர்கள் போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் கடந்த தேர்தலின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிசெய்தவர்களுக்கு இதுவரை மதிப்பு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் கடந்த தேர்தலின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிசெய்தவர்களுக்கு இதுவரை மதிப்பு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த தேர்தலின் போது திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு 230 பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலராகப் பணி அமர்த்தப்பட்டனர். நிலை அலுவலராகப் பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு 7 ஆயிரத்து 150 மதிப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் தேர்தல் பணி செய்ய வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து அரசுப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி உள்ளனர். 

இந்நிலையில், பணியாற்றிய 230 பேர்களில் 211 பேருக்கு மட்டும் அவர்களது சொந்த வங்கிக்கணக்குகளில் பணத்தை செலுத்திவிட்டு மீதமுள்ள 19 பேருக்கு இதுவரை ஊதிய பணத்தை தராமலும் 19 பேர்களின் பணத்தை அதிகாரிகள் கையாடல் செய்ததாக கூறி, தேர்தல் பணியாற்றிய 19 பேர் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள தேர்தல் பிரிவு தாசில்தார்  ராமலக்ஷ்மணனின் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பணியாற்றிய ஆசிரியர்கள் கூறுகையில், "19 பேரின் பணத்தை அதிகாரிகள் கையாடல் செய்து விட்டதாகவும், அதிகாரிகளை வந்து கேட்டால் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதாகவும் தங்களுக்கு சேரவேண்டிய தொகையை பெறாமல் வெளியில் செல்லமாட்டோம்", என்று கூறினர். ஆசிரியர்கள் திடீர் காத்திருப்பு போராட்டத்தினால் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...