நீலகிரியில் மீன் வலையில் சிக்கிய பாம்பு உயிருடன் மீட்பு

உதகை அருகே விவசாய நிலத்தில் வேலிக்காக அமைக்கப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கிய பாம்பு வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது.

நீலகிரி : உதகை அருகே விவசாய நிலத்தில் வேலிக்காக அமைக்கப்பட்டிருந்த மீன் வலையில் சிக்கிய பாம்பு வனத்துறையினரால் உயிருடன் மீட்கப்பட்டது. 



நீலகிரி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மலை காய்கறிகளான கேரட், பிட்ரூட், முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இப்படி பயிரிடப்படும் காய்கறிகளை அடிக்கடி வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள விவசாய நிலங்களில் முள் வேலிகள் மற்றும் மின் வேலிகள் மற்றும் மீன் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், உதகை அருகேயுள்ள அத்திக்கள் என்னும் கிராமத்தில் ஒரு குடியிருப்பு அருகே சாரை பாம்பு ஒன்று மீன் வலையில் சிக்கியுள்ளதாக வன பாதுகாவலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற வன பாதுகாவலர் சாதிக் மீன் வலையில் சிக்கியிருந்த பாம்பை உயிருடன் மீட்டார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், "சிறு வன விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்க இதை போன்ற மீன் வலைகளை விவசாயிகள் அமைத்து வருகின்றனர். இதில் சிக்கி சிறு வன விலங்குகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, விவசாயிகள் இதைப் போன்று மீன் வலைகளை வேலிகளில் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்." என்றார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...