நாளுமன்ற தேர்தலில் இ.பி.எஸ் மற்றும் தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் - அமைச்சர் ராம்தாஸ் அத்வாலி

வருகிற 2019 நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் அணியரும் ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ராம்விலாஸ் அத்வாலி கூறியுள்ளார்.


கோவை: வருகிற 2019 நாடாளுமன்ற தேர்தலில் தினகரன் அணியரும் ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலி கூறியுள்ளார்.

கோவை விருந்தினர் மாளிகையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் கூறியதாவது:-

திரிபுராவில் 30 ஆண்டுகளாக ஆட்சி அமைத்து வந்த இடதுசாரிகளை பா.ஜ.க வீழ்த்தி இருக்கிறது.

மேகாலயாவிலும் அதிக இடங்களை பிடித்து இருக்கிறது. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்க உறுதுணையாக இருக்கும்.

தினகரன் தற்போதுள்ள அதிமுகவில் இணைந்து அமைச்சராக வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. தினகரன் அணி, ஒ.பி.எஸ் - இ.பி.எஸ் அணியினர் வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற முடியும். 

இதுவரை மறைமுகமாக ஆதரவளித்து வந்த அ.தி.மு.க.,வினர் நேரடியாக ஆதரவளிக்க வேண்டும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கிறோம். 

மகாராஷ்டிராவில் பா.ஜ.க , சிவசேனா இடையில் உள்ள பிரச்சினைகளை போக்க முயற்சி செய்கிறோம். இருவரும் அங்கு தனித்தனியாக போட்டியிட்டால் மக்களுக்கு பலன் இல்லாமல் போய்விடும்.

இந்தியா போன்ற நாடுகளில் சாதி மறுப்பு திருமணங்களை தடுக்கக்கூடாது. பாக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் போட்டியிட இந்தியா என்ற கோட்பாடுக்குள் தான் நாம் எதிர்க்க வேண்டியுள்ளதால் சாதி,மதங்களை கடந்து வாழ வேண்டும்.

வடமாநிலங்களில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஜாட், படேல் போன்று இட ஒதுக்கீடு கேட்கும் சமூகங்களை அதில் சேர்க்க வேண்டும். தலித் மக்கள் மீதான தாக்குதலை அரசியலாக்க வேண்டாம். சாதி முறையே தலித் மக்கள் மீதான தாக்குதலுக்கு காரணம். தலித் மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க சாதி மறுப்பு திருமணங்கள் ஒரு வகையில் தீர்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...