கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடக்கம்

கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

கோவை : கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.



போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பின்பற்றும் 'சைக்கிள் ஷேரிங்' எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகம் செய்ய கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, ஜி.பி.எஸ். உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட சைக்கிள்கள் தயார் செய்யப்பட்டன. இந்தத் திட்டத்திற்கான டெண்டரை ஓஃபோ என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சைக்கிளை வாடகைக்குப் பெற விரும்புவோர் தங்களது மொபைலில் செயலியை பதிவிறக்கம் செய்து, பல்வேறு நடைமுறைகளுக்கு பிறகு QR கோடை இயக்கி சைக்கிளை எடுத்துச் செல்லலாம். 



இந்த நிலையில், ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி. அம்மனியம்மாள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சைக்கிள் சேரிங் திட்டம் மற்றும் மக்கும் தன்மையுடைய பையோபேக் திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. இதில், ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின்கீழ், கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புதிட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர், தண்ணீரில் கரையக்கூடிய பைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்தார். மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன், காவல்ஆணையர் பெரியய்யா, போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...