உலக வனஉயிரின நாள் விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

வால்பாறையில் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறை : வால்பாறையில் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 



வால்பாறையின் உலக வன உயிரின நாளை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகங்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், வால்பாறை பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லுரி வளாகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக வால்பாறை தபால் நிலையம் சென்றடைந்தனர்.

இப்பேரணியில் வனத்தைக் காப்போம், வன உயிரினங்களைக் காப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். இப்பேரணியை வால்பாறை காவல்துறை ஆய்வாளர் திருமேனி, வால்பாறை வட்டாட்சியர் குணசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் கலந்து கொண்டனர். 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...