வால்பாறை டவுன் பகுதியில் மீண்டும் சிறுத்தைப்புலி அட்டகாசம் : பொதுமக்கள் பாதுகாப்பில் அதிகாரிகள் அலட்சியம்

கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதியில் மீண்டும் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதியில் மீண்டும் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை டவுன் பகுதியில் வட்டாட்சியர் மற்றும் மாணவியர் விடுதி, உண்டு உறைவிடப்பள்ளி, தனியார் பள்ளி மற்றும் குடியிருப்பு நிறைந்த பகுதியாகும். இன்று அதிகாலையில் மாணவியர் விடுதி அருகாமையில் சிறுத்தைப்புலி கால்நடையை வேட்டையாடிய போது குடியிருப்பு அருகாமையில் இருந்த கார்களில் ரத்தக்கரை ஏற்பட்டுள்ளதோடு உராய்வும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் சிறுத்தைப்புலியின் கால்தடமும் உள்ளது. கால்நடையை வேட்டையாடி விட்டு, மாணவியர் விடுதி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அடர்ந்த புதர் செடிக்குள் மறைந்துள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.



வால்பாறை டவுன் பகுதியில் உள்ள காமராஜர் நகர், கலைஞர் நகர், வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளில் புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை அகற்ற நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்த போது, இது நகராட்சிக்கு சொந்தமான இடம் இல்லை எனக் கூறி மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர். 

தற்போது, வனவிலங்குகளின் கூடாரமாக மாறி வரும் இப்பகுதியில், கடந்த மாதம் வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகில் கழுதை ஒன்றை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றதும், நடுமலை எஸ்டேட்டில் குடியிருப்புக்கு அருகில் புதர்கள் நிறைந்து காணப்பட்டதால் அதற்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி சைதுல் என்ற சிறுவனை தாக்கி கொன்றதும் குறிப்பிடத்தக்கது. 

எனவே, டவுன் பகுதிக்குள் காணப்படும் புதர்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும், மனித உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாகவே டவுன் பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, நடுமலை எஸ்டேட்டில் 4 வயது சிறுவனை சிறுத்தைப்புலி தாக்கி கொன்றதையடுத்து, வால்பாறை பகுதிகளில் உள்ள அனைத்து எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள புதர்களை 10 தினங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று அனைத்து எஸ்டேட் நிர்வாகத்திற்கும், அரசு அதிகாரிகளுக்கும் பொள்ளாச்சி சார் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், 15 நாட்கள் ஆகியும் சார் ஆட்சியரின் உத்தரவை அரசு அதிகாரிகளும் ஒரு சில எஸ்டேட் நிர்வாகங்களும் காற்றில் பறக்க விட்டனர். சார் ஆட்சியரின் உத்தரவை மதிக்காத இந்த அலட்சியப் போக்கிற்கு சார் ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...