கோவையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் : 4 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை : ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நேற்று  மாலை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை மடக்கி விசாரித்த போது அதில் 108 பொட்டலங்களில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 



இதனைத் தொடர்ந்து, காரில் இருந்த தர்மர் (50), பாண்டீஸ்வரன் (22),  இருளாண்டி (42) மற்றும் சதீஸ் குமார் (33) ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது அவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கஞ்சா விற்பனை செய்வதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கஞ்சா வியாபாரிகள் பயன்படுத்திய கார், பணம் ரூ.1,50,000 ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...