தொடங்கியது +2 தேர்வு : கோவையில் 38,833 பேர் தேர்வு எழுதுகின்றனர்

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் தனித் தேர்வர்கள் என 38 ஆயிரத்து 903 பேர் எழுதுகின்றனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள் தனித் தேர்வர்கள் என 38 ஆயிரத்து 833 பேர் எழுதுகின்றனர். 

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. கோவை கல்வி மாவட்டத்தில், 86 மையங்களில் நடக்கும் இத்தேர்வை, 30 ஆயிரத்து 28 மாணவர்கள் எழுதுகின்றனர். இதுதவிர, ஏழு மையங்களில் ஆயிரத்து 729 தனித் தேர்வர்களும் எழுதுகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 27 மையங்களில் 6 ஆயிரத்து 805 மாணவர்களும், ஒரு மையத்தில் 341 தனித் தேர்வர்களும்தேர்வு எழுதுகின்றனர். 



தேர்வுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் 12 தேர்வு ஒருங்கிணைப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அந்த மையங்களில் இருந்து 23 வழித்தடங்கள் மூலமாக காலை 6 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன. 20 மாணவர்களுக்கு ஒரு அறை வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் 2800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.



அனைத்து நோடல் மையங்களிலும், தேர்வர்களுக்கான விதிமுறைகள், விதிகளை மீறினால் அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் 

கோவை கல்வி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 27 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல், 23 மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 29 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 13 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 2 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை வருவாய் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல், 26 மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. காது கேளாதவர்கள் 31 பேருக்கு மொழிப்பாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு சார்ந்த, அனைத்து விதமான புகார்களையும், அறை கண்காணிப்பாளர் அல்லது நோடல் மைய ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு குறித்த புகார்களை 0422-2391062 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...