யானை தாக்கி பண்ணைத் தொழிலாளி படுகாயம்: ரூ.1௦ ஆயிரம் நிவாரணம் வழங்கினார் வனப்பாதுகாவலர்

கோவை அருகே காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த பண்ணைத் தொழிலாளிக்கு வனப்பாதுகாபாளர் பழனிராஜா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

கோவை: கோவை அருகே காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த பண்ணைத் தொழிலாளிக்கு வனப்பாதுகாபாளர் பழனிராஜா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

பெரிய நாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவர் அப்பகுதியில் உள்ள பண்ணையில் பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அதைப் பார்த்தது அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், அவரைத் துரத்திய காட்டு யானை துதிக் கையால் தாக்கியதில் படுகாயமடைந்தார். 



தொடர்ந்து, அப்பகுதி மக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று கோவை அரசு மருத்துவமனையில் அவரைச் சந்தித்த பெரியநாயக்கன்பாளையம் சரக வனப் பாதுகாப்பாளர் பழனிராஜா, அவருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணத்தை வழங்கினார்.

இதனிடையே, பண்ணையின் உரிமையாளர் பாதுகாப்பான முறையில் பண்ணையை பராமரிக்கவில்லை என்றும் யானை தாக்கிய தொழிலாளிக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...