கார்த்திக் சிதம்பரம் கைது

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது இந்திராணி முகர்ஜியின் மீடியா நிறுவனத்திற்கு சாதகமாக அனுமதி அளித்தார் என்றும், இதற்காக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான செஸ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம் அட்வான்டேஜ் டிரேடிஜிக் கன்சல்டிங் நிறுவனம் வழியாக ரூ.10 லட்சம் பெற்றது என்றும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல் டெல்லி, மும்பை, குர்கான் மற்றும் நொய்டா உள்பட நாடு முழுவதும் 14 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில், அன்னிய முதலீடு வழங்கியதில் பலகோடி ரூபாய் கைமாறியதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ப.சிதம்பரம் உறவினர்கள் சஜய் சம்பூர்த்தி, ராம்ஜி நடராஜன், கைலாசம், மனோஜ் மோகன்கா உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முறைகேடுகளுக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

இந்த தொடர் சோதனைகளைத் தொடர்ந்து கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன், தொழில் ரீதியான பங்குதாரர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக லண்டனில் தங்கியிருந்த கார்த்திக் சிதம்பரம் இன்று காலை சென்னை திரும்பினார். இதனைத் தொடர்ந்து அவரை சி.பி.ஐ., அதிகாரிகள் அவரது வீட்டில் கைது செய்தனர். விசாரணைக்கு ஒத்துழைக்காத நிலையில் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ததாக சி.பி.ஐ., அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சர்ஜிவாலா, பா.ஜ.க., அரசின் நிதி முறைகேடுகள் தினமும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. நீரவ் மோடி, மெஹூல் சோக்ஷி, துவர்கா தாஸ் உள்ளிட்டோரை காப்பாற்ற நினைக்கும் பா.ஜ.க., அரசு, மக்களை ஏமாற்ற காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...