வாய்க்காலில் கார் பாய்ந்த விபத்தில் இளம்ஜோடிகள் பரிதாப பலி

திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் தவறி விழுந்த விபத்தில் இளம்ஜோடிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலில் தவறி விழுந்த விபத்தில் இளம்ஜோடிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடுமலை அருகே ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் சங்கர். இவருக்கும், ரெவின்யூ நகரைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் திருமணம் செய்ய உறவினர்களால் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இருவருக்கும் திருமணத்திற்கு நிச்சயம் செய்ய இருந்த நிலையில், கடந்த 23-ம் தேதி காரில் சென்றவர்கள் இருதினங்களாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பயந்துபோன இரண்டு பேரின் வீட்டாரும் உடுமலை போலீஸாரில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில், பி.ஏ.பி. வாய்க்காலில் கார் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் காரில் சடலமாக இருந்த அருண்சங்கர் மற்றும் மஞ்சுளாவின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...