பயன்பாடு குறைவால் 3 ரயில் நிலையங்கள் மூடல்

மிகக்குறைந்த பயன்பாடு காரணமாக தனியாரால் இயக்கப்படும் சேலம், நாமக்கல் தடத்தில் மற்றும் ஈரோடு திருச்சி தடத்தில் உள்ள 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கோவை : மிகக்குறைந்த பயன்பாடு காரணமாக தனியாரால் இயக்கப்படும் சேலம், நாமக்கல் தடத்தில் மற்றும் ஈரோடு திருச்சி தடத்தில் உள்ள 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மத்திய ரயில்வே வாரிய வணிகத்துறையின் 24.06.2005 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 26/2005-ன் படி, அதிக ரயில்கள் இயக்கமில்லாத வழித்தடங்கள் உள்ள தனியாரால் இயக்கப்படும் ரயில்நிலையங்களில் ஒரு நாளைக்கு அங்கிருந்து ரயிலில் ஏறிச்செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்த பட்சம் 25-ஆவது இருக்க வேண்டும். ஆனால், ஏப்ரல் 2017 முதல் டிசம்பர் 2017 வரையிலான 9 மாத கால கட்டத்தில் கீழ்க்கண்ட 3 ரயில்நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள படியால், அந்த ரயில்நிலையங்களில் பயணிகள் ரயிலின் நிறுத்தாமல், அந்த ரயில்நிலையங்களையும் கீழ்க்கண்ட தேதிகளில் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, சேலம் கரூர் தடத்தில் ராசிபுரம் களங்காணி இடையே உள்ள புதுச்சத்திரம் ரயில்நிலையம் வரும் 19-ம் தேதி முதல் மூடப்படுகிறது. அதே போல் சேலம் கரூர் தடத்தில் நாமக்கல் மோகனூர் இடையே உள்ள லட்டிவாடி ரயில்நிலையமும், கரூர் திருச்சி தடத்தில் ஜீயனூர் முத்தரசநல்லூர் இடையே உள்ள மேக்குடி ரயில்நிலையம் வரும் 19-ம் தேதி மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...