மிகக்குறைந்த பயன்பாடு காரணமாக தனியாரால் இயக்கப்படும் சேலம், நாமக்கல் தடத்தில் மற்றும் ஈரோடு திருச்சி தடத்தில் உள்ள 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை : மிகக்குறைந்த பயன்பாடு காரணமாக தனியாரால் இயக்கப்படும் சேலம், நாமக்கல் தடத்தில் மற்றும் ஈரோடு திருச்சி தடத்தில் உள்ள 3 ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய ரயில்வே வாரிய வணிகத்துறையின் 24.06.2005 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 26/2005-ன் படி, அதிக ரயில்கள் இயக்கமில்லாத வழித்தடங்கள் உள்ள தனியாரால் இயக்கப்படும் ரயில்நிலையங்களில் ஒரு நாளைக்கு அங்கிருந்து ரயிலில் ஏறிச்செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்த பட்சம் 25-ஆவது இருக்க வேண்டும். ஆனால், ஏப்ரல் 2017 முதல் டிசம்பர் 2017 வரையிலான 9 மாத கால கட்டத்தில் கீழ்க்கண்ட 3 ரயில்நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள படியால், அந்த ரயில்நிலையங்களில் பயணிகள் ரயிலின் நிறுத்தாமல், அந்த ரயில்நிலையங்களையும் கீழ்க்கண்ட தேதிகளில் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் கரூர் தடத்தில் ராசிபுரம் களங்காணி இடையே உள்ள புதுச்சத்திரம் ரயில்நிலையம் வரும் 19-ம் தேதி முதல் மூடப்படுகிறது. அதே போல் சேலம் கரூர் தடத்தில் நாமக்கல் மோகனூர் இடையே உள்ள லட்டிவாடி ரயில்நிலையமும், கரூர் திருச்சி தடத்தில் ஜீயனூர் முத்தரசநல்லூர் இடையே உள்ள மேக்குடி ரயில்நிலையம் வரும் 19-ம் தேதி மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.