முதன் முறையாக இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கே.எம்.சி.எச் மருத்துவமனை சாதனை

கே.எம்.சி.எச் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரே நேரத்தில் கணையம் மற்றும் சிறுநீரகம் என இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர்.


கோவை : கே.எம்.சி.எச் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரே நேரத்தில் கணையம் மற்றும் சிறுநீரகம் என இரட்டை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்துள்ளனர். 



காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ் (29). பிறவியிலேயே நீரிழிவு  நோயால் பாதிக்கப்பட்ட இவர் விழித்திரை பாதிப்பு, நரம்பு மண்டல கோளாறு ஆகிய நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தார். 

சமீபத்தில் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த அவரிடம் கணைய மற்றும் சிறுநீரக உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.



இந்த நிலையில், உறுப்பு தானம் மூலம் கிடைத்த சிறுநீரகம் மற்றும் கணையத்தை அறுவை சிகிச்சை மூலமாக சதீஸ்-க்கு அம்மருத்துவமனை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். 

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அம்மருத்துவமனையின் தலைவர் நல்லா பழனிச்சாமி பேசுகையில், " இந்தியாவில் இது போன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அறிய ஒன்றாகும். தென்னிந்தியாவில் சென்னைக்கு அடுத்து இங்கு தான் இரட்டை உருப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது" என்றார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...