கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 20 காவல் நிலையங்கள் ISO தரச்சான்று பெற்ற நிலையங்களாக உயர்ந்துள்ளன.


கோவை: கோவை மாவட்ட காவல்துறையின் மக்கள் நட்பு மற்றும் தரமான காவல் சேவைகளுக்கான முக்கிய அங்கீகாரமாக, மாவட்டத்தில் உள்ள மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் மொத்தம் 20 காவல் நிலையங்கள் தற்போது ISO தரச்சான்று பெற்ற காவல் நிலையங்களாக உயர்ந்துள்ளன.


கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு தரமான, விரைவான மற்றும் மக்கள் நட்பு காவல் சேவைகளை வழங்க பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, காவல் நிலையங்களின் நிர்வாகம், சேவைத் தரம், புகார் பராமரிப்பு, ஆவண மேலாண்மை, சுத்தம் மற்றும் பொதுமக்கள் அணுகுமுறை போன்ற அம்சங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக, மே 21, 2026 அன்று கோவை மாவட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஆனைமலை, வால்பாறை, பேரூர், KG சாவடி, மதுக்கரை, காருண்யா நகர், ஆலந்துறை, தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கோமங்கலம், சிறுமுகை, நெகமம், கருமத்தம்பட்டி மற்றும் வடக்கிப்பாளையம் காவல் நிலையங்கள் ISO சான்றிதழ் பெற்றுள்ளன.


இதற்கு முன்பாகவே சூலூர், பொள்ளாச்சி தாலுகா, பொள்ளாச்சி கிழக்கு, மகாலிங்கபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் காவல் நிலையங்கள் ISO சான்றிதழ் பெற்றிருந்தன. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் மொத்தம் 20 காவல் நிலையங்கள் தற்போது ISO தரச்சான்று பெற்ற காவல் நிலையங்களாக உயர்ந்துள்ளன.

இந்த சாதனையை ஏற்படுத்திய காவல் நிலைய ஆய்வாளர்கள், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு கோவை மாவட்ட காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது.


மேலும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட காவல்துறையினர் இனியும் பொதுமக்களுக்கு உயர்தர காவல் சேவைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வழங்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...