கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தண்ணீரை மாற்று வழியாக திருப்பி உடைந்த கரையை தற்காலிகமாக சீரமைத்தனர்.


கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட (பி.ஏ.பி.) வாய்க்காலில் இன்று கோவை செஞ்சேரிமலை அருகே திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் பெருமளவு தண்ணீர் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து வீணானது.



மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பாசனத் திட்டம், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் பாசனத்திற்காக வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஏற்பட்ட இந்த உடைப்பு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



தகவலறிந்த விவசாயிகள் உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் முதற்கட்டமாக மாற்று மதகுகள் வழியாக தண்ணீரை திருப்பிவிட்டனர். தொடர்ந்து, உடைந்த கரைப்பகுதியில் மண் கொட்டி தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது பாறாங்கற்கள் மூலம் கரையை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த நவம்பர் மாதம் வாவிபாளையம் பகுதியில் ஏற்பட்ட இதேபோன்ற வாய்க்கால் உடைப்பு சம்பவத்தில் அதிகாரிகள் தாமதமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. ஆனால் இந்த முறை சில மணி நேரங்களிலேயே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததை விவசாயிகள் பாராட்டியுள்ளனர்.

இருப்பினும், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழமையான வாய்க்கால் பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுவதால், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முழுமையான சீரமைப்பு மற்றும் கரை பலப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...