பிடிவாரண்ட்டைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜரானார் சரிதா நாயர் : வழக்கு விசாரணை பிப்., 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜவேலு உத்தரவிட்டார்.

கோவை : காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட  வழக்கில் விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜவேலு உத்தரவிட்டார்.  

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் திரைப்பட நடிகை சரிதா நாயர். இவர், கடந்த 2009-ம் ஆண்டு கோவை வடவள்ளி பகுதியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார்.

நிறுவனங்களில் காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் எனபரிடம் ரூ.28 லட்சம் , ஊட்டியைச் சேர்ந்த வெங்கட்ரமணன் மற்றும் ஜோயோ ஆகியோரிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில், சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மேலாளர் ரவி ஆகியோர் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இவ்வழக்கு  விசாரணைக்காக ஆஜராகும்படி தொடர்ந்து 4 முறை சம்மன் அனுப்பியும் சரிதா நாயர் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் ஆஜராகவில்லை. 

இதனால்,சரிதாநாயர் மற்றும் ரவி இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தும், நீதிபதி ராஜவேல் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் சாரதா நாயர் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...