கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3 நாட்கள் நடக்கும் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018” நிகழ்ச்சி நாளை துவங்குகிறது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 3 நாட்கள் நடக்கும் ”கொங்கு கால்நடைத் திருவிழா 2018” நிகழ்ச்சி நாளை துவங்குகிறது.
பொள்ளாச்சி அருகே சமத்துாரில் 'வாணவராயர் பவுண்டேஷன்' சார்பில் கொங்கு நாட்டு கால்நடைத் திருவிழா மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. நான்காவது ஆண்டாக சமத்துார், பெத்தநாயக்கனுார் சாலையில் உள்ள சக்தி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் நாளை துவங்கி 11-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. முதல் நாள் கோமாதா பூஜை, இரண்டாவது நாள் கால்நடைகளுக்கான போட்டி, மூன்றாவது நாள் பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், வேளாண்மை மற்றும் பால் பண்ணைக்கான உபகரணங்களின் கண்காட்சியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
பொள்ளாச்சி அருகே சமத்துாரில் 'வாணவராயர் பவுண்டேஷன்' சார்பில் கொங்கு நாட்டு கால்நடைத் திருவிழா மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. நான்காவது ஆண்டாக சமத்துார், பெத்தநாயக்கனுார் சாலையில் உள்ள சக்தி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தில் நாளை துவங்கி 11-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. முதல் நாள் கோமாதா பூஜை, இரண்டாவது நாள் கால்நடைகளுக்கான போட்டி, மூன்றாவது நாள் பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், வேளாண்மை மற்றும் பால் பண்ணைக்கான உபகரணங்களின் கண்காட்சியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.