தொடர் வண்டியில் வாங்க...! மிதிவண்டியில் போங்க...!

கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி, மதுரை வழி ராமேஸ்வரம் ரயில்கள் வரவேற்பு மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் அறிமுகம் - கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்

கோவை : கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி, மதுரை வழி ராமேஸ்வரம் ரயில்கள் வரவேற்பு மற்றும் விழிப்புணர்வு போட்டிகள் அறிமுகம் - கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்

திடீரென்ற பேருந்து கட்டண உயர்வினால் மக்கள் வருத்தத்தில் இருக்கும் இச்சமயத்தில், இந்திய ரயில்வே துறை கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி, மதுரை, ராமேஸ்வரம் வரை மூன்று புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் வரவேற்வக்கத்தக்க பாராட்டப்படவேண்டிய  விசயமாகும். 

புதிய அறிவிப்பின்படி, கோவையில் இருந்து அதிகாலை 5:15 மணிக்கு புறப்படும் ரயில், பொள்ளாச்சிக்கு 6:45 மணிக்கு வந்தடைகிறது. மீண்டும் காலை  7:15 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டு காலை 8:30 மணிக்கு கோவை சென்றடையும். அதேபோல, மாலை 6:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 7:15 மணிக்கு பொள்ளாச்சி வந்தடைகிறது. இரவு 7:45 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து திரும்பும் ரயில், இரவு 9:00 மணிக்கு கோவையை சென்றடைகிறது. இச்சிறப்பு ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இருக்கும். மேலும், மூன்று மாதத்திற்கு இச்சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மக்களின் தொடர் 

 பயன்பாட்டினையும், பயனாளர்களின் எண்ணிக்கையையும் பொருத்து தொடர்ந்து இந்த ரயில்களின் பயன்பாடு நீட்டிக்கப்படும். 

பேருந்து கட்டணங்களிலிருந்து விடுபடும் நோக்கிலும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் விதமும் பெரும்பான்மையான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துவது சிறப்பு. ஆகவே, இந்த புதிய ரயில்கள் பற்றிய சரியான விழிப்புணர்வு மற்றும் இச்செய்தியினை மக்களிடம் பரவலாக கொண்டு சேர்க்கும் விதம் கோவை  சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் பின்வரும் இரண்டு புதுவிதமான போட்டிகளையும், பரிசுகளையும் அறிவித்திருக்கிறது. 

முதல் போட்டியாக கோவையிலிருந்து புறப்படும் இந்த புதிய ரயிலினை பொள்ளாச்சி வரை சென்றவர் அல்லது பொள்ளாச்சியிலிருந்து கோவை வந்தவர்கள் மற்றும் கோவையிலிருந்து பொள்ளாச்சி முதல் பழனி, மதுரை, ராமேஸ்வரம் வரை பயணிக்கும் பயனாளர்கள்,  டிக்கெட்டை அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன் எங்கள் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் டிராப் பாக்சில் போடலாம். மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் இருக்கும் எங்கள் சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் அலுவலகத்திலும் நேரடியாக வழங்கலாம். நேரில் வர இயலாதவர்கள் தங்களின் டிக்கெட் எண், பிஎன்ஆர் நெம்பர், தங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை எங்களின் [email protected] எனும் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது பின்வரும் எண்களுக்கு எஸ்எம்எஸ்-வாட்சப்பிலும் தெரிவிக்கலாம். (99947 64375, 94421 07546, 98948 26029, 98422 11993, 94435 78224) நாங்கள் அனைவரது பெயரையும் இணைத்து குலுக்கல் முறையில் வாரம் ஒருவருக்கு ஒரு சைக்கிள் பரிசளித்து கவுரவிக்கவிருக்கிறோம். சைக்கிள் பரிசானது பெட்ரோல் சேமிப்பு, பேருந்து கட்டணத்திலிருந்து தப்பித்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் நோக்கில் வழங்கப்படுகிறது. 

இரண்டாவது போட்டியாக புதிய ரயில்களின் நேரம் மற்றும் மேலே கூறியுள்ள கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்பின்  புதிய ரயில்களின் விழிப்புணர்விற்கான போட்டியையும் தங்களின் நண்பர்கள் மற்றும் சோசியல் நெட்வொர்க்காகிய பேஸ்புக், டுவிட்டர் முக்கியமாக குறைந்தது 100 வாட்சப் குரூப்களுக்கோ அல்லது தங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்களுக்கும் அனுப்பிவிட்டு தாங்களின் பெயர் மற்றும் தாங்கள் அனுப்பிய விபரங்களை எங்கள் சிட்டிசன் வாய்ஸ் கிளப் அலுவலகத்தில் தெரிவிக்கும் முதல் 100 நபர்களுக்கு நமது மறைந்தும் மக்கள் மனதில் மறையாத முன்னாள் குடியரசுத் தலைவர்  ஏ.பி.ஜே. அப்துல்கலாமின்  புத்தகம் பரிசாக வழங்கப்படும். 

கோவையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரசை ஏபிஜே அப்துல்கலாம் எக்ஸ்பிரஸ் எனும் கோரிக்கையை வலியுறுத்தியும், அவரின் நினைவாகவும்  ஏபிஜே அப்துல்கலாமின்  புத்தகம் வழங்கப்படுகிறது.

மக்கள் நலனில் அக்கறையுள்ள சமூக ஆர்வலர்கள் அனைவரும் இச்செய்தியினை பரவலாக்குமாறு கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. மேலும் மத்திய ரயில்வேத்துறை மூலமாகவோ அல்லது கோவையின் மக்கள் நலனில் அக்கறையுள்ள சமூக அமைப்புகளின் உதவியுடனும் இப்பரிசுகள் தொடர்ந்து வழங்கப்படும்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...