வேளாண்., பொறியியல் துறையில் தற்காலிக தொழிற்பழகுநர்கள் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

வேளாண்மை பொறியியல் துறையில் தற்காலிகமாக ஒருவருட பயிற்சி காலத்திற்கு தொழிற்பழகுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: வேளாண்மை பொறியியல் துறையில் தற்காலிகமாக ஒருவருட பயிற்சி காலத்திற்கு தொழிற்பழகுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவிக்கையில், கோவை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையில், உதவி செயற்பொறியாளர் இயந்திர கலப்பை பணிமனை, கோவை அலுவலகத்தின் பணிமனையில் அரசு அங்கீகாரம் பெற்ற அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற நபர்கள் தற்காலிகமாக ஒருவருட பயிற்சி காலத்திற்கு தொழிற் பழகுநர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். 

வெல்டர்-2 எண்கள், பிட்டர்-2 எண்கள் மற்றும் டிராக்டர் மெக்கானிக்-1 எண் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர், கல்வித்தகுதி ஆவணங்கள் (நகல்), முகவரி, புகைப்படத்துடன் கூடிய விபரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை ஒளிம நகலுடன் சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையில் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, இயந்திர கலப்பை பணிமனை, மருதமலைரோடு, கோவை - 641003 என்ற முகவரிக்கு வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும், அரசால் மேற்குறித்த பிரிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி கால ஊக்கத்தொகை மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...