வேளாண்., பொறியியல் துறையில் தற்காலிக தொழிற்பழகுநர்கள் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

வேளாண்மை பொறியியல் துறையில் தற்காலிகமாக ஒருவருட பயிற்சி காலத்திற்கு தொழிற்பழகுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: வேளாண்மை பொறியியல் துறையில் தற்காலிகமாக ஒருவருட பயிற்சி காலத்திற்கு தொழிற்பழகுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவிக்கையில், கோவை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையில், உதவி செயற்பொறியாளர் இயந்திர கலப்பை பணிமனை, கோவை அலுவலகத்தின் பணிமனையில் அரசு அங்கீகாரம் பெற்ற அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற நபர்கள் தற்காலிகமாக ஒருவருட பயிற்சி காலத்திற்கு தொழிற் பழகுநர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர். 

வெல்டர்-2 எண்கள், பிட்டர்-2 எண்கள் மற்றும் டிராக்டர் மெக்கானிக்-1 எண் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர், கல்வித்தகுதி ஆவணங்கள் (நகல்), முகவரி, புகைப்படத்துடன் கூடிய விபரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை ஒளிம நகலுடன் சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையில் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, இயந்திர கலப்பை பணிமனை, மருதமலைரோடு, கோவை - 641003 என்ற முகவரிக்கு வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும், அரசால் மேற்குறித்த பிரிவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி கால ஊக்கத்தொகை மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...