திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருப்பூர், ஜனவரி 25
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு சமீபத்தில் பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயர்வும், ஜிஎஸ்டி போன்ற வரி அதிகரிப்பும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை வாட்டிவரும் நிலையில் தமிழக அரசின் இந்த செயல் அனைத்துத் தரப்பினரிடையேயும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தொடர்ந்து, தமிழக அரசின் இந்த மக்கள் விரோதத் திட்டத்தை எதிர்த்து மாணவர்களும், கட்சி அமைப்பினரும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை முதலே அவிநாசி நகர் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் டீக்கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன.
மேலும், முழு அடைப்பு போராட்டம் காரணமாக அப்பகுதி முழுவதுமே சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்த அளவிலேயே உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு சமீபத்தில் பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயர்வும், ஜிஎஸ்டி போன்ற வரி அதிகரிப்பும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை வாட்டிவரும் நிலையில் தமிழக அரசின் இந்த செயல் அனைத்துத் தரப்பினரிடையேயும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தொடர்ந்து, தமிழக அரசின் இந்த மக்கள் விரோதத் திட்டத்தை எதிர்த்து மாணவர்களும், கட்சி அமைப்பினரும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை முதலே அவிநாசி நகர் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் டீக்கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன.
மேலும், முழு அடைப்பு போராட்டம் காரணமாக அப்பகுதி முழுவதுமே சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்த அளவிலேயே உள்ளது.