கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வாலிபர்களை மீது வழக்குப்பதிவு செய்த சாய்பாபா   காலனி போலீசார்  அவர்களை கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (34). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக டிரைவராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று, மருதமலையில் இருந்து ஆவாரம்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தை ரவிக்குமார் ஓட்டி வந்தார். அப்போது மேட்டுப்பாளையம் சாலையில் அவிநாசிலிங்கம் கல்லூரி அருகே பேருந்து சென்றுகொண்டிருந்த போது, சிலர் பேருந்தை அடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பேருந்தை நிறுத்திய டிரைவர் ரவிக்குமார், சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர்கள் அவரை ஆபாசமாக திட்டியதுடன், கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து ரவிக்குமார் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், விருதுநகர் மாவட்டம் நல்லம்மா நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (23) மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் தற்போது கவுண்டம்பாளையம் தக்கல் மார்க்கெட் அருகே தங்கி இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...