பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவிநாசியில் கடை அடைப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருப்பூர், ஜனவரி 25

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு சமீபத்தில் பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயர்வும், ஜிஎஸ்டி போன்ற வரி அதிகரிப்பும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை வாட்டிவரும் நிலையில் தமிழக அரசின் இந்த செயல் அனைத்துத் தரப்பினரிடையேயும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தொடர்ந்து, தமிழக அரசின் இந்த மக்கள் விரோதத் திட்டத்தை எதிர்த்து மாணவர்களும், கட்சி அமைப்பினரும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, இன்று காலை முதலே அவிநாசி நகர் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் டீக்கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன.

மேலும், முழு அடைப்பு போராட்டம் காரணமாக அப்பகுதி முழுவதுமே சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்த அளவிலேயே உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...