9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவையில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, ஜனவரி 23

கோவையில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சூலூர் அடுத்த சென்னசிட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி(36). குடும்பப் பிரச்சனை காரணமாக வெள்ளியங்கிரி தனது மனைவி மற்றும் மகளைப் பிரிந்திருந்த நிலையில் வாழ்ந்து வந்தார். தனது மகளுடன் பயிலும் சக மாணவி (9) பேசினால் குடும்பப் பிரச்சனை தீர்ந்துவிடும் எனக் கூறி மகளின் தோழியை வெள்ளியங்கிரி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமிக்கு வெள்ளிங்கிரி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2015-ல் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ பிரிவின்கீழ் வெள்ளியங்கிரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 9 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...