கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும் என ஒகி புயல் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஜனவரி 9

கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும் என ஒகி புயல் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

ஒகி புயல் குறித்து தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏ பிரின்ஸ் உள்ளிட்டோரின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறியதும், வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் மீனவர்களுக்குத் தகவல் தரப்பட்டது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநரால், தொலைப்பேசி வாயிலாக முக்கியத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 30ம் தேதி தமிழக அரசுக்கு ஒகி புயல் குறித்து தகவல் கிடைத்தவுடன், மாவட்ட நிர்வாகங்கள் மூலம் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தென்கடலோர மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்தி விடுக்கப்பட்டது. தொலைத் தொடர்புக் கருவிகள் இல்லாததால் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களுக்குத் தகவல் தர முடியவில்லை. அதேபோல, ஆழ்கடலில் தங்கி மீன் பிடிப்பவர்களுக்கும் தகவல் அளிக்க முடியவில்லை. 

ஒகி புயல் பாதித்த பிறகு, மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, பிற மாநிலக் கரைகளில் கரை ஒதுங்கிய 1,174 மீனவர்களுக்கு உணவுப் படியாக ரூ.2,000 வழங்கப்பட்டு அவர்கள் பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்பட்டனர். காணாமல் போன மீனவர்களைத் தேடிய மீனவர்களுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் உணவுகளையும் தமிழக அரசு வழங்கியது. பிற மாநில கரைகளில் கரை சேர்ந்தவர்களை அழைத்து வர ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

அந்த வகையில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தமிழக மீனவர்களைப் பத்திரமாக அழைத்து வந்தனர். ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கப் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினேன். ஒகி புயல் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு தரப்பில் ரூ.133 கோடி ரூபாய் முதற்கட்டமாக தமிழக அரசுக்கு வழங்கியது. கடைசி மீனவர் கரை திரும்பும் வரை மீட்புப் பணி தொடரும். ஒகி புயலில் சிக்கி மரணம் அடைந்த 20 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...