வெகுவிமர்சையாக நடந்த 26-ம் ஆண்டு ஜெகநாதர் தேர்திருவிழா : ஏராளமானோர் சுவாமி தரிசனம்


கோவை, ஜனவரி 06

கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில் 26-வது ஆண்டாக நடைபெற்ற ஜெகநாதர் தேர்த்திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 



கோவையில் ஆண்டுதோறும் இஸ்கான் எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் தேர்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 26-வது ஆண்டாக நடைபெற்ற திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட 42 அடி உயரத் தேரில் ஜெகநாதர், சுப்ரதாதேவி சிலைகளுடன் பலதேவர் சிலைகளும் அமைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்டவற்றுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.



மேலும், ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்ற முழக்கங்களை எழுப்பியபடி, அவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். பொதுவாக, மக்கள் கோவில்களில் கடவுளை வழிபடச் செல்லும் நிலையில், மக்களைக் காண கடவுள் வருவதாக நம்பிக்கையுடன் இத்தேர் திருவிழா வருடந்தோறும் நடத்தப்பட்டு வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். தேர்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் உற்சாகத்துடன் ஆடிப்பாடிச் சென்ற காட்சிகள் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...