சிறுவாணி நீரைப்போல் சிறப்பு மிக்கவர்கள் கோவை ஊர்காவல் படையினர்- மாநகர காவல்துறை ஆணையர் புகழாரம்

கோவை, ஜனவரி 06

சிறுவாணி நீரைப் போல் சிறப்பு மிக்கவர்கள் கோவை மாநகர ஊர்காவல் படையினர் என்று ஊர்காவல் படை தின விழாவில் மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா புகழாரம் சூட்டியுள்ளார்.



ஆண்டுதோறும் டிசம்பர் 6-ம் தேதியன்று ஊர்காவல் படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு இன்று கோவை மாநகர ஊர்காவல் படையின் பிராந்திய தளபதி டி.கே. தனசேகர் தலைமையில் மாநகர ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.



இதைத் தொடர்ந்து, அவினாசி சாலையில் உள்ள காவல்துறை சமூகக் கூடத்தில் ஊர்காவல் படை தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கோவை மாநகர ஆணையர் கே. பெரியய்யா மற்றும் துணை ஆணையர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய ஊர்காவல் படையினருக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

விழாவில் மாநகர காவல்துறை ஆணையர் பேசுகையில், "2-ஆம் உலகப்போரின் போது தோன்றியது தான் இந்த ஊர்க்காவல் படை. 1963-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் ஊர்க்காவல் படை விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 622 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினரின் பங்கு மிக அதிகமாக இருந்தது. அப்போது, கோவையில் இருந்து மட்டும் 468 பேர் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தனர். கோவையை பொறுத்தவரை ஊர்க்காவல் படையினர் சிறந்த தலைமையை பெற்றுள்ளனர். உலகின் மிகச்சிறந்த நீராக சிறுவாணி நீர் உள்ளது. அதன் சிறப்பைப் போலவே கோவை ஊர்க்காவல் படையினரும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளனர்." இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...