சிறுவாணி நீரைப்போல் சிறப்பு மிக்கவர்கள் கோவை ஊர்காவல் படையினர்- மாநகர காவல்துறை ஆணையர் புகழாரம்

கோவை, ஜனவரி 06

சிறுவாணி நீரைப் போல் சிறப்பு மிக்கவர்கள் கோவை மாநகர ஊர்காவல் படையினர் என்று ஊர்காவல் படை தின விழாவில் மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா புகழாரம் சூட்டியுள்ளார்.



ஆண்டுதோறும் டிசம்பர் 6-ம் தேதியன்று ஊர்காவல் படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு இன்று கோவை மாநகர ஊர்காவல் படையின் பிராந்திய தளபதி டி.கே. தனசேகர் தலைமையில் மாநகர ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்றது.



இதைத் தொடர்ந்து, அவினாசி சாலையில் உள்ள காவல்துறை சமூகக் கூடத்தில் ஊர்காவல் படை தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கோவை மாநகர ஆணையர் கே. பெரியய்யா மற்றும் துணை ஆணையர்கள் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய ஊர்காவல் படையினருக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

விழாவில் மாநகர காவல்துறை ஆணையர் பேசுகையில், "2-ஆம் உலகப்போரின் போது தோன்றியது தான் இந்த ஊர்க்காவல் படை. 1963-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் ஊர்க்காவல் படை விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 622 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினரின் பங்கு மிக அதிகமாக இருந்தது. அப்போது, கோவையில் இருந்து மட்டும் 468 பேர் பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தனர். கோவையை பொறுத்தவரை ஊர்க்காவல் படையினர் சிறந்த தலைமையை பெற்றுள்ளனர். உலகின் மிகச்சிறந்த நீராக சிறுவாணி நீர் உள்ளது. அதன் சிறப்பைப் போலவே கோவை ஊர்க்காவல் படையினரும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளனர்." இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...