மதுரை, நெல்லை வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகக் கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 12

மதுரை மற்றும் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகக் கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவோயிஸ்ட்கள் தரப்பில் வாதாடி வந்த மதுரை வழக்கறிஞர் முருகன், அதே வழக்கில் இணைத்துக் கடந்த ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் சிறைபடுத்தப்பட்டார். இவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், நெல்லை மாவட்டம் வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி மீது தாக்குதல் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தைப் புறக்கணித்துள்ளனர்.

இதன் ஒருபகுதியாகக் கோவையில் உள்ள 3 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக எதிராக வாதாடும் வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். வழக்கறிஞர்களுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...