வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய நீலகிரி போலீஸார்

டிசம்பர் 09

நீலகிரி மாவட்டத்தில், வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர். 

குன்னூரில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.முரளிரம்பாவின் உத்தரவின் பேரில், குன்னூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அ.முத்தமிழ் அறிவுறுத்தலின்படி, குன்னூர் நகரக் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளித்தனர். 

இந்த விழிப்புணர்வின் போது, இருசக்கர வாகன ஓட்டிகளிடம், அதிவேகமாகப் பயணித்தல், குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிக பாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும்போது தொலைப்பேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

இந்த விழிப்புணர்வின் போது உடன் காவல்துறை துணை ஆய்வாளர்கள் ரகுவரன், திரு. ஜான் மற்றும் திரு. ஜெயக்குமார் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...