கோவில்களை இடிக்கப் போவதாகக் கூறிய திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரிக்கை

கோவை, டிசம்பர் 09

கோவில்களை இடிக்கப் போவதாகக் கூறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவில் இருந்து சேலம் செல்லும் வழியில் கோவை ரயில் நிலையத்தில் பாஜக நிர்வாகிகளை அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், சிவன் கோவில் உள்ளிட்ட அனைத்துக் கோவில்களையும் இடிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசி இருப்பது மதக் கலவரத்தை தூண்டும் செயலாகும். ஜிகாதிகளின் பின்னால் மறைந்து கொண்டு அவர் பேசுகிறார்.

கரூர், மாயவரத்தில் நடந்ததை திருமாவளவன் நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு தனது சமூக பெண்களைத் தவிர்த்து மற்ற சமூக பெண்களை இழிவாக பேசியவர் திருமாவளவன். கடந்தாண்டு அவர் பெண்களைப் பற்றி பேசியதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்கின்றரா..?

 கோவில்களை இடிப்போம் எனக் கூறி சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் திருமாவளவனை குண்டர் சட்டத்தில் தமிழக அடைக்க வேண்டும். மேலும், புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியைப் போல நல்ல விசயங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திருமாவளவன் சொல்லி கொடுப்பதில்லை. கடந்த ஆண்டு பெண்களை திருமாவளவன் இழிவாகப் பேசியது நிச்சயம் ஆர்.கே.நகர் தேர்தலில் எதிரொலிக்கும். என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...