புரூக்பாண்ட் சாலை இரு வழிப்பாதையாக மாற்றம்

கோவை, டிசம்பர்.9: 

இன்று முதல் புரூக் பாண்ட் சாலையை இருவழிப் பாதையாக மாற்றி தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர்.



கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் இருந்து வடகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்த புரூக்பாண்ட் சாலை ஒரு வழிப்பதையாக மாற்றப்பட்டது. 

இந்த மாற்றத்தால் அவினாசி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பூமார்க்கெட் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைய வேண்டி இருந்தது. 



இதனால் பூமார்க்கெட் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. விழாக்காலங்களின் போது பொதுமக்கள் பூமார்க்கெட் பகுதியில் அதிக அளவில் திரளும் போது அவ்வழியே வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.

சமீபத்தில் கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற K.பெரியய்யா, மாநகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, புரூக்பாண்ட் சாலை இரு வழிப்பாதையாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது.



ஆணையரின் உத்தரவின் பேரில் கடந்த இரு தினங்களாக புரூக்பாண்ட் சாலையை புனரமைக்கும் பணி நடைபெற்றது.

இதற்காக பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சாலை சீரமைக்கப்பட்டது. செண்டர் மீடியன் கற்களை சாலைகளின் நடுவே அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தன.

இதனை தொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு புரூக்பாண்ட் சாலைக்கு வந்த மாநகர காவல்துறை ஆணையர் அந்த சாலையை இருவழிப்பாதையாக மாற்றி திறந்து வைத்தார்.



இந்த புரூக்பாண்ட் சாலை இருவழிப்பாதையாக மற்றப்பட்டதை தொடர்ந்து, பூமார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கனிசமாக குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...