புரூக்பாண்ட் சாலை இரு வழிப்பாதையாக மாற்றம்

கோவை, டிசம்பர்.9: 

இன்று முதல் புரூக் பாண்ட் சாலையை இருவழிப் பாதையாக மாற்றி தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர்.



கோவை அவினாசி சாலை மேம்பாலத்தில் இருந்து வடகோவை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் பிரதான சாலையாக இருந்த புரூக்பாண்ட் சாலை ஒரு வழிப்பதையாக மாற்றப்பட்டது. 

இந்த மாற்றத்தால் அவினாசி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் பூமார்க்கெட் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைய வேண்டி இருந்தது. 



இதனால் பூமார்க்கெட் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. விழாக்காலங்களின் போது பொதுமக்கள் பூமார்க்கெட் பகுதியில் அதிக அளவில் திரளும் போது அவ்வழியே வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.

சமீபத்தில் கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற K.பெரியய்யா, மாநகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, புரூக்பாண்ட் சாலை இரு வழிப்பாதையாக மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது.



ஆணையரின் உத்தரவின் பேரில் கடந்த இரு தினங்களாக புரூக்பாண்ட் சாலையை புனரமைக்கும் பணி நடைபெற்றது.

இதற்காக பொக்லைன் இயந்திரங்களை கொண்டு சாலை சீரமைக்கப்பட்டது. செண்டர் மீடியன் கற்களை சாலைகளின் நடுவே அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தன.

இதனை தொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு புரூக்பாண்ட் சாலைக்கு வந்த மாநகர காவல்துறை ஆணையர் அந்த சாலையை இருவழிப்பாதையாக மாற்றி திறந்து வைத்தார்.



இந்த புரூக்பாண்ட் சாலை இருவழிப்பாதையாக மற்றப்பட்டதை தொடர்ந்து, பூமார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் கனிசமாக குறைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...