நீதிமன்றம் அனுமதி இல்லாமல் சசிகலாவை விசாரிக்க முடியாது - வருமானவரித் துறைக்கு சிறை அதிகாரி கடிதம்

நவம்பர் 26

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவை, நீதிமன்ற அனுமதி இல்லாமல் விசாரிக்க அனுமதிக்க முடியாது என வருமானவரி துறைக்கு சிறை அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஜெயா டிவி அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், நமது எம்ஜிஆர் உள்பட பல நிறுவனங்களில் தொடர்ந்து 5 நாட்கள் நடந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ், லேப்-டாப் ஆகியவை சிக்கின.

இதுதொடர்பாக, சசிகலாவின் உறவினர்களான விவேக், கிருஷ்ணபிரியா, ‌ஷகிலா ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், நமது எம்ஜிஆர் ஆகிய நிறுவனங்களில் 2015-ம் ஆண்டுக்கு பிறகே நாங்கள் நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டோம். அதற்கு முன்பு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது, என்று பதில் அளித்தனர். 

இதையடுத்து. 2015-ம் ஆண்டுக்கு முன்பு இந்த நிறுவனங்களை நிர்வகித்து வந்த சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரி பெங்களூரு சிறை அதிகாரி சோமசேகருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பினர். 

சசிகலாவிடம் விசாரிக்க எந்த நேரத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு சிறைக்கு வருவார்கள் என்று தகவல் வெளியானது. இதுதொடர்பாக சசிகலாவை அவரது வழக்கறிஞர் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் சிறை அதிகாரி சோமசேகர் சென்னையில் உள்ள வருமானவரித்துறை மண்டல இயக்குநருக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- சசிகலாவும், இளவரசியும் குற்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வேண்டும். நீதிமன்ற அனுமதி இல்லாமல் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது. 

கர்நாடக மாநில சிறை விதிகளின்படி நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே வருமானவரித்துறை விசாரணைக்கேற்ற நாள், இடம் ஆகியவற்றை ஒதுக்கித் தர முடியும். அரசு துறைரீதியான கடிதம் மட்டுமே அதற்கு போதுமானது அல்ல. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், சசிகலாவிடம் விசாரணை நடத்துவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்கக்கோரி பெங்களூரு மாநகர நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் இதுதொடர்பாக மனுதாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். நீதிமன்றம் அனுமதி கொடுக்கும்பட்சத்தில் சசிகலாவிடம் விசாரணை நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...