அரசு வேலை வழங்க வலியுறுத்தி சோமனூர் பேருந்து நிலைய விபத்தில் உயிரிழந்த நடத்துநர் மனைவி கோரிக்கை

கோவை, நவம்பர் 20: அரசு வேலை வழங்க வலியுறுத்தி சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த பேருந்து நடத்துநர் சிவக்குமாரின் மனைவி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் அரசு பேருந்து நடத்துநர் சிவக்குமாரும் ஒருவர்.

இவரது உயிரிழப்பிற்கு தமிழக அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், சிவக்குமாரின் மனைவி சௌந்தரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார். அதில், கணவரை இழந்து 6 மாத கைக்குழந்தையுடன் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருவதாகவும், தனக்கு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.



Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...