மாநில அளவிலான கூட்டுறவு வார விழாவில் சிறந்த சங்கங்களுக்கு விருது


கோவை, நவம்பர் 18: கோவையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான கூட்டுறவு வார விழாவில், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சர்கள் விருதுகளை வழங்க உள்ளனர்.

மாநில அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா வரும் 20-ம் தேதி காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா கலையரங்கில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத் சங்கங்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, இந்திய நாட்டின் ஏழை, எளிய மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் துணையாகவும், ஒரு பாலமாகவும் விளங்குவது கூட்டுறவு சங்கங்களாகும். 

ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் 100 ஆண்டுகளைக் கடந்தும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன . இவ்வாறு கூட்டுறவு சங்கங்கள் ஏழை எளிய மக்களின் முதுகெலும்பாகவிளங்குகின்றன என்பதை அறிந்தே தமிழக அரசு கூட்டுறவுத்துறைக்கு அதிக அளவிலான முக்கியத்துவம் அளித்து, திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 

அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையிலும், கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்துவதன் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகின்றது. 

இதனையொட்டி, மாநில அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் முன்னிலையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும், வறுமையில் பின்தங்கியுள்ளவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு நிதியுதவித்தொகைகளும், கூட்டுறவு வாரவிழாவினையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கவுள்ளனர். 

 தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அமுதா அருணாச்சலம் வரவேற்புரையாற்றவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன் அவர்கள் திட்ட விளக்கவுரையாற்றவும், கூட்டுறவு உணவுப்பாதுகாப்புத்துறை செயலர் குமார்ஜெயந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலையுரையாற்றவும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல் நன்றியுரையாற்றவும் உள்ளனர்.

மேலும், கூட்டுறவு சங்கங்களின் முக்கியத்துவத்தினை பறைசாற்றும் வகையிலான நாடகங்களும், கலை நிகழச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும். எனவே, இவ்விழாவில் கூட்டுறவே நமது நாட்டுயர்வு என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...