மாநில அளவிலான கூட்டுறவு வார விழாவில் சிறந்த சங்கங்களுக்கு விருது


கோவை, நவம்பர் 18: கோவையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான கூட்டுறவு வார விழாவில், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சர்கள் விருதுகளை வழங்க உள்ளனர்.

மாநில அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா வரும் 20-ம் தேதி காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா கலையரங்கில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத் சங்கங்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, இந்திய நாட்டின் ஏழை, எளிய மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் துணையாகவும், ஒரு பாலமாகவும் விளங்குவது கூட்டுறவு சங்கங்களாகும். 

ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் 100 ஆண்டுகளைக் கடந்தும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன . இவ்வாறு கூட்டுறவு சங்கங்கள் ஏழை எளிய மக்களின் முதுகெலும்பாகவிளங்குகின்றன என்பதை அறிந்தே தமிழக அரசு கூட்டுறவுத்துறைக்கு அதிக அளவிலான முக்கியத்துவம் அளித்து, திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. 

அதன்படி, கூட்டுறவு சங்கங்களின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் வகையிலும், கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்துவதன் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகின்றது. 

இதனையொட்டி, மாநில அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் முன்னிலையில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும், வறுமையில் பின்தங்கியுள்ளவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு நிதியுதவித்தொகைகளும், கூட்டுறவு வாரவிழாவினையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கவுள்ளனர். 

 தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அமுதா அருணாச்சலம் வரவேற்புரையாற்றவும், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன் அவர்கள் திட்ட விளக்கவுரையாற்றவும், கூட்டுறவு உணவுப்பாதுகாப்புத்துறை செயலர் குமார்ஜெயந்த், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலையுரையாற்றவும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.ஏ.சக்திவேல் நன்றியுரையாற்றவும் உள்ளனர்.

மேலும், கூட்டுறவு சங்கங்களின் முக்கியத்துவத்தினை பறைசாற்றும் வகையிலான நாடகங்களும், கலை நிகழச்சிகளும், சொற்பொழிவுகளும் நடைபெறும். எனவே, இவ்விழாவில் கூட்டுறவே நமது நாட்டுயர்வு என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...