கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: ​கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் வகையில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

​இந்த வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறுகிறது. 

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம். 

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் நேரில் வருகை தந்து வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

​இந்த முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு ஏதுமில்லை மற்றும் நுழைவு முற்றிலும் இலவசமாகும். 

பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். 

விண்ணப்பதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in ஆகிய இணையதளங்களில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளலாம். 

கூடுதல் விவரங்களுக்கு 94990-55937 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...