போயஸ் கார்டனில் வருமான வரி சோதனை நிறைவு - ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த அனுமதி மறுப்பு

நவம்பர் 18: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தில் 4 மணி நேரம் நீடித்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த, சசிகலா தரப்பினர் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை.

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் நேற்றிரவு வருமான வரித்துறையினர், அதிரடியாக சோதனை நடத்தினர். ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடப்பது குறித்த தகவல் தெரிந்ததும், இரவு 10:30 மணிக்கு ஜெயா டிவி மேனேஜிங் டைரக்டர் விவேக் அங்கு சென்றுள்ளார். சுமார் நான்கு மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. அதிகாலை சுமார் 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இந்நிலையில், ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை என விவேக் தெரிவித்தார்.

சோதனைக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா வாழ்ந்த வீடு கோவில் போன்றது. இங்கு சோதனை நடத்தியது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. சில கடிதங்கள், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப்பை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதற்கு அதிமுக.,வினர் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (நவ., 18) காலை முதல் போயஸ் கார்டன் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகே அப்பகுதியில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், திடீரென போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...