கோவை, நவம்பர் 18: மேற்குமண்டல காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் இன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

தமிழக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த குறைதீர்ப்பு முகாமில் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்கள் மற்றும் சிறப்பு காவல்படையை சேர்ந்த 1,242 போலீசார் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி டி.ஜி.பி.யிடம் அளித்தனர்.

மனுக்களில், இடமாறுதல், பதவி உயர்வு, வழங்கப்பட்ட தண்டனைகளில் இருந்து நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இந்த குறைதீர்ப்பு முகாமிற்கு கோவையில் இருந்து மட்டும் 510 போலீசார் கலந்து கொண்டனர். மேலும், திருப்பூரில் இருந்து 210 பேரும், நீலகிரியில் இருந்து 110 காவலர்களும் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. ராஜேந்திந்திரன் தெரிவித்தார்.

இந்த முகாமில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா மற்றும் மேற்குமண்டல காவல்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.