கோவை, நவம்பர் 16: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பப்படி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டு வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் வரும் டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த விழாவிற்கானகால்கோள் பூசையானது இன்று வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்ட 7 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பூசைகள் செய்யப்பட்டு கால்கோள் ஊன்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி கூறுகையில்,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விருப்பப்படி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பல கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கூறியிருக்கிறோம். கோவையில் நடைபெற உள்ள நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும். கோவையில் நடக்கும் கூட்டம் அனைத்து மாவட்டங்களை விட சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன், பொள்ளாச்சி - கோவை இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தச் சாலையில் மூன்று மேம்பாலங்கள் அமைக்க கோரிக்கைகள் வந்துள்ளன. இதை மத்திய அரசிடம் தெரிவித்து பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொள்ளாச்சி - கோவை இடையே 4 வழி சாலை அமைக்கப்பட்ட பின்னர் சுங்க சாவடி அமைக்க கூடாது. அப்படி சுங்க சாவடி அமைக்கப்பட்டால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும். பொள்ளாசியில் இருந்து திண்டுக்கல் வரை 4 வழி சாலை முழுவதுமாக அமைக்கப்பட்ட பின்னர்தான் சுங்கசாவடி அமைக்கப்பட வேண்டும். ஆளுநர் ஆய்வினை ஊடகங்கள்தான் சர்ச்சை செய்கின்றன. என்றார்.
கோவை வ.உ.சி மைதானத்தில் வரும் டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த விழாவிற்கானகால்கோள் பூசையானது இன்று வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்ட 7 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பூசைகள் செய்யப்பட்டு கால்கோள் ஊன்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி கூறுகையில்,முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விருப்பப்படி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பல கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கூறியிருக்கிறோம். கோவையில் நடைபெற உள்ள நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படும். கோவையில் நடக்கும் கூட்டம் அனைத்து மாவட்டங்களை விட சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன், பொள்ளாச்சி - கோவை இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்தச் சாலையில் மூன்று மேம்பாலங்கள் அமைக்க கோரிக்கைகள் வந்துள்ளன. இதை மத்திய அரசிடம் தெரிவித்து பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொள்ளாச்சி - கோவை இடையே 4 வழி சாலை அமைக்கப்பட்ட பின்னர் சுங்க சாவடி அமைக்க கூடாது. அப்படி சுங்க சாவடி அமைக்கப்பட்டால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும். பொள்ளாசியில் இருந்து திண்டுக்கல் வரை 4 வழி சாலை முழுவதுமாக அமைக்கப்பட்ட பின்னர்தான் சுங்கசாவடி அமைக்கப்பட வேண்டும். ஆளுநர் ஆய்வினை ஊடகங்கள்தான் சர்ச்சை செய்கின்றன. என்றார்.