கோவையில் 3 பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் அதிகம் - கோவை அரசு மருத்துவமனையின் தலைவர் தகவல்

கோவை, நவம்பர் 4: கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கணபதி மற்றும் தெலுங்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டெங்குக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகக் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் காய்ச்சல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கோவை அரசு மருத்துவமனை உயர்தர சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில், சிங்காநல்லூர், கணபதி மற்றும் தெலுங்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். பி.அசோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணக்கிடும் போது, அதிகளவு நோயாளிகள் சிங்காநல்லூர், கணபதி மற்றும் தெலுங்குபாளையம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட அண்டை மாவட்டத்தினருக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், 50 சதவீதத்தினர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள்.

டெங்கு காய்ச்சலானது, ஆரம்ப நிலையைக் கண்டறிந்து, மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் விரைவில் குணப்படுத்த முடியும். நோய் முற்றினால்,சிகிச்சை அளிப்பது கடினமானது. சுற்றுப்புறம் மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் டெங்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டத்தில் டெங்கு ஒழிக்கும் பணியில் ஈடுபடும் மாநகராட்சி, சுகாதாரமற்ற பகுதிகளை கண்டறிந்து அபராதம் விதித்து வருகிறது. தற்போது, டெங்கு அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் குறிப்பிட்டுள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் மாநகராட்சி டெங்குத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...