கோவையில் 3 பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் அதிகம் - கோவை அரசு மருத்துவமனையின் தலைவர் தகவல்

கோவை, நவம்பர் 4: கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கணபதி மற்றும் தெலுங்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டெங்குக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகக் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் காய்ச்சல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்குக் கோவை அரசு மருத்துவமனை உயர்தர சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில், சிங்காநல்லூர், கணபதி மற்றும் தெலுங்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். பி.அசோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணக்கிடும் போது, அதிகளவு நோயாளிகள் சிங்காநல்லூர், கணபதி மற்றும் தெலுங்குபாளையம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட அண்டை மாவட்டத்தினருக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், 50 சதவீதத்தினர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள்.

டெங்கு காய்ச்சலானது, ஆரம்ப நிலையைக் கண்டறிந்து, மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் விரைவில் குணப்படுத்த முடியும். நோய் முற்றினால்,சிகிச்சை அளிப்பது கடினமானது. சுற்றுப்புறம் மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் டெங்கு நோய் பரவுவதைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்டத்தில் டெங்கு ஒழிக்கும் பணியில் ஈடுபடும் மாநகராட்சி, சுகாதாரமற்ற பகுதிகளை கண்டறிந்து அபராதம் விதித்து வருகிறது. தற்போது, டெங்கு அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதிகளை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைவர் குறிப்பிட்டுள்ள நிலையில், அந்தப் பகுதிகளில் மாநகராட்சி டெங்குத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...