நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கோவை: கோவை சூலூர் அடுத்த நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



அச்சங்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக நீலாம்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த நபரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில், இந்த மரணத்தின் பின்னணியில் நள்ளிரவில் நடந்த மோதல் இருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவில் சம்பவ இடம் அருகே ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

போதை அல்லது பணத் தகராறு காரணமாக, இருவர் சேர்ந்து வாலிபரை தாக்கி கொலை செய்து விட்டு, சடலத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நீலாம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அச்சங்குளம் மற்றும் நீலாம்பூர் பைபாஸ் சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகன எண்களின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...