ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என தமிழக நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.


Coimbatore: ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

தமிழக நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இத்துறையின் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

குறிப்பாக நெசவாளர்கள் விசைத்தறி தொழிலின் மூலம் 1.60 லட்சம் மின் இணைப்புகளுடன் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. மேலும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைத்தறி மற்றும் பெடல் தறிகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தானியங்கி தறிகள் மூலம் தினந்தோறும் மூன்று கோடி மீட்டருக்கும் அதிகமான துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

நெசவாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்களுக்கு மின்சார சலுகை, நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் நெசவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் தமிழக ஜவுளித்துறை இந்திய அளவிலும், உலகளவிலும் முன்னிலை வகிக்க, ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களை நியமிக்கும் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்புகள் வழங்க தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...